சிசுடைன் சிற்றாலய உட்கூரை
Jump to navigation
Jump to search
சிசுடைன் சிற்றாலய உட்கூரை (Sistine Chapel ceiling) என்பது திருத்தந்தை இரண்டாம் ஜூலியுஸினால் அதிகாரமளிக்கப்பட்டு, 1508 ம் ஆண்டு முதல் 1512 ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் மைக்கலாஞ்சலோவினால் தீட்டப்பட்ட, சிசுடைன் சிற்றாலயத்தில் அமைந்துள்ள, உயர் மறுமலர்ச்சிக் கலையின் சுதை ஓவியங்கள் ஆகும். இந்த உட்கூரை, திருத்தந்தை நான்காம் சிக்ஸ்துவினால் 1477 க்கும் 1480 க்கும் இடைப்பட்ட காலத்தில் வத்திக்கான் நகரில் கட்டப்பட்ட திருத்தூதரக அரண்மனையின் அருகே அமைந்துள்ளது. இவ்வாலயம் புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கக் கூடும் இடத்திலும், பல முக்கிய வழிபாடுகள் நடைபெறும் இடத்திலும் அமைந்து உள்ளது.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ Shearman 1986, pp. 22–36